விதுர நீதி :
1/369
எளியார் நலிவான் வெளியது நோக்கி
உளியது ஓங்குவார் ஒத்து!
2/369
இயலா தனமுயற்றல் வானவில்லைக் கோடல்
செயலாப் புனைவார் புரட்டு!
3/370
கதிர்பற்றி வெய்யோன்வான் ஓட்டம் தடுக்கவோ?
ஆதியான சோதியும் அற்று!
4/370
இசைந்து செவிமடுப்பார்க் கல்லால் கசிந்து
உரையா திருப்பார் குரு!
5/371
நெறிமையால் ஈட்டல் முறைமை விடுத்து
பெருமை கொளல்என்னோ சால்பு?
6/372
தற்புகழ்ச்சி தாழ்நெறியோர் பால்ஈட்டல் வெல்பகை
பாற்புகழ்ச்சி இத்தனையும் பாழ்!
7/373
நோற்பவை நோலாமை நோற்கலா வாற்றலிவை
மேலாவார்க் கென்றும் இழுக்கு!
8/373
101. பொய்மை புரட்டு பொறையிலார் வீழ்த்தப்போம்
தூய்மை உளராவார் கூட்டு!
9/374
வேட்கை இலாதார்க்கு ஈந்த பெரும்கல்வி
தாட்சியாய் ஆற்ற விலக்கு !
10/375.
தனக்கலாத எஃதும் தவிர்த்தல் நெறியாம்
தனக்காக்கல் புன்மையுள் ஒன்று!
11/378
தீயது கண்டு பொறுமார் பொறைமைதான்
நோயது கொண்டு முடித்து!
12/378
குலவதுவை ஏசி பலர்முன்னே தாழ்ப்பவர்போய்
பாஞ்சாலிக் கற்றது பெற்று!
13/379
ஈகை மறப்ப தறமன்று துஷ்யந்தன்
ஆகை போலா மது!
14/379
ஐயமும் பிச்சையும் அந்தணர்க் கீதல்வாய்
செய்க தமைதாழ விட்டு!
15/379
காலத்தே ஈகை கடப்பாடு! ஈவதாய்
கோலிய கோடாமை நன்று!
16/380
அவரவர் தந்தாம் நெறிதனில் நிற்றல்
தவமென போற்றப் படும்!
17/535
தான்தன் உடலம் புலன்கள் பிராணன்
மேன்தெய்வம் வாய்ப்பச் செயல்.
--தாசாரதி தாஸன்
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .
--தாசாரதி தாஸன்
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .
No comments:
Post a Comment