ராமாநுஜ தசகம் :
1. பொய்என்றும் சூனியம் மாயையே என்றிவ்வோ
வாய்மை அலாத சிலர்கூற -- பொய்த்தான்அப்
பொய்யுரை யாவும் இராமா நுசன்வந்து
மெய்யுரை செய்வான் மறைக்கு.
வாய்மை அலாத சிலர்கூற -- பொய்த்தான்அப்
பொய்யுரை யாவும் இராமா நுசன்வந்து
மெய்யுரை செய்வான் மறைக்கு.
2. பாஷ்யகார் எண்மரோடு தானுமாய், கோள்கள்
விஷயமாம் ஆதவன் தன்னொடு -- அஷ்டம
கோசார வாழ்பலன் போலா, பரமபதம்
போய்சேர அஷ்டாங்க சித்து.
விஷயமாம் ஆதவன் தன்னொடு -- அஷ்டம
கோசார வாழ்பலன் போலா, பரமபதம்
போய்சேர அஷ்டாங்க சித்து.
3. இரவிக் கதிர்இருளைப் நீக்குமிறை யன்பர்
உறவும் அணுக்கமும் சித்தம் -- நெறிபட
நல்குமேல் ராமா நுசனடி சீயாக்கள்
மல்கவொழி யாவோ மருள்?
4. ஜகம்புகழும் ராமா நுசன்மித்யா வாதம்
ஜகமிதில் நீறுசெய் தோய்த -- ஜகதுள வாத கொடைவள்ளல் ! முக்திநல் ஞானம்
பொதுவாக்கி வீடுசெய்வான் போந்து !
ஜகமிதில் நீறுசெய் தோய்த -- ஜகதுள வாத கொடைவள்ளல் ! முக்திநல் ஞானம்
பொதுவாக்கி வீடுசெய்வான் போந்து !
5. தலைவிதாய் தோழி எனஆழ்வார் செய்த
அலவல் அதுகண் டிரங்கா -- அலவலன்
மாலை கடியன் கொடியனென்ன வாளை
போலை எதிராசர் எற்று?
அலவல் அதுகண் டிரங்கா -- அலவலன்
மாலை கடியன் கொடியனென்ன வாளை
போலை எதிராசர் எற்று?
6. கதிநமக்கு வேறுண்டோ? நன்மதி பெற்ற
யதிபதி ராமா நுசன்செய் -- விதியிங்கு
அந்தரத்து வைகுந்தம் பைய தரைக்கிழிய
தந்தாமத் தென்செயமா லுக்கு?
யதிபதி ராமா நுசன்செய் -- விதியிங்கு
அந்தரத்து வைகுந்தம் பைய தரைக்கிழிய
தந்தாமத் தென்செயமா லுக்கு?
7. உய்ய ஒருவழி நம்முடைய வர்துய்ய
செய்ய திருவடி! ஐயநீர் -- பொய்யா
பிடிக்கிலும் மெய்யா உதவிடும்! மாயோன்
கடைக்கண் செய்யா படிறு.
செய்ய திருவடி! ஐயநீர் -- பொய்யா
பிடிக்கிலும் மெய்யா உதவிடும்! மாயோன்
கடைக்கண் செய்யா படிறு.
8. கண்ணன் வழிகீதை! ஆழ்வார் அவர்மொழி
பண்ணார் தமிழ்பாடல் ஆயிரமும் -- அண்ணல்
இராமா நுசமுனி பண்ணியநூல் ஒன்பதோ டாமே
நெறியார் விளக்கம் அவைக்கு.
பண்ணார் தமிழ்பாடல் ஆயிரமும் -- அண்ணல்
இராமா நுசமுனி பண்ணியநூல் ஒன்பதோ டாமே
நெறியார் விளக்கம் அவைக்கு.
9. உடையவர் ஆயிரம் நன்றுநமக் கானதும்
கோடை வெயிலுக்கோர் குன்றருவி -- ஓடை
எனவந்த வள்ளல் இராமா நுசனவன்
ஞானக்கை ஒல்க உயர்வு !
கோடை வெயிலுக்கோர் குன்றருவி -- ஓடை
எனவந்த வள்ளல் இராமா நுசனவன்
ஞானக்கை ஒல்க உயர்வு !
10. பூமுடியும் பொன்வடமும் பாங்கான தோளிரண்டில்
தூமலர் தாழ்சரமும் புத்தாடை -- தாமணிந்த
போகப் புதுக்கணிப்பும் நம்மிரா மானுசா!
ஏகமெண்ணும் என்றன் மனம்.
முக்தாயம்:
தூமலர் தாழ்சரமும் புத்தாடை -- தாமணிந்த
போகப் புதுக்கணிப்பும் நம்மிரா மானுசா!
ஏகமெண்ணும் என்றன் மனம்.
முக்தாயம்:
ஏழைஎம் சொல்ஏறும் கொல்?கிளி தாவிய
வாழைசேர் சோலை அரங்கன் -- புழல்வாவி
முற்றத்துக் கொவ்வைவாய் கோகிலங்கள் இன்சொல்ஆழ்ந்
துற்ற எதிதன் செவிக்கு?
வாழைசேர் சோலை அரங்கன் -- புழல்வாவி
முற்றத்துக் கொவ்வைவாய் கோகிலங்கள் இன்சொல்ஆழ்ந்
துற்ற எதிதன் செவிக்கு?
இரும்நாள் நமக்கு உலகிதில் இன்பம்
தரும்திருமால் பக்கல் சலியா -- புலன்வாய்
வலம்தரும் தன்னடிசேர்த் தொல்லை எதிராசார்
நலம்தரும் நாமம் புலர்த்து.
-- (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .
No comments:
Post a Comment