Tuesday, December 12, 2017

திருவஞ்சிக்களம் :

திருவஞ்சிக்களம் :
இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல்
மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும்
அருளாழி வண்ணர் கண்ணன் நம்பெருமான்
திருவாளன் திண்கழல் துணையாதல் தேடுவயே.
தேட்டம் திருமால் தொண்டர் கூட்டத்து ஈட்டம்
வாட்டமில் பெரியாற் றின்பால் வஞ்சிக் களம்மேல்
நாட்டம் நாளும் எனக்கு கொடுங்கலூர் மாதவன்
பாட்டாயா தமிழ்மாலை பாடிப் புகழ்வன் அவனையே.
மெய்யாம் மறையை மறைவாழ் திருவை
செய்புரள் பெரியாரின் வடபால் வஞ்சிக்களம்
எய்திவைகும் மாதவன்தன் கோயில் நண்ணி
உய்யகதி ஓம்புவார் உற்றார்எனக் காவரே .
ஊனேய் குதம்பைஉயிர் வாடவாடும்
வானேய் வண்கையார் வஞ்சிக்களத்து
மானேய்மடப் பின்னைதன் மாதவற்கு
யானேகி வினையாவும் ஓய்வனே.
தருவாய்நீ மாவலி மூவடி என்றேகி
ஒருகால் காட்டி மறுகால் அளந்த
பெருமான் புகுதவிடம் திருவஞ் சிக்களம்
சிரமேலது செறிமென் குழலாள் நோக்கு.
ஏர்முன் நடப்ப பார்பின் செல்லும்
வேர்முன் எழுமது இவ்வுலகில் தொட்டனைத்
தூரும் கழனிப் பழவயல்திரு வஞ்சிக்களம்
நேர்முன் நடப்பார் பாங்காய பத்தரே.
ஆலின் மேலான் அலைகடல் துயின்றான்
பாலின் பிறந்த புத்துமங்கை தாம்மணந்த
நூலின் மேலோன் நுவன்றுறை வஞ்சிக்களம்
கோலிக் குறுகுவார் வானோர்நல் விருந்து.
மன்னன் குலசேகரன் நாளும் நினைந்து நைந்து
தென்னரங்கம் திசைநோக்கி நாடிமேவல் விழைவான்
என்னுடைய இன்னமுதர் காணலின்று நாளையாக
என்னோ? ஏழைக்கு இரங்கும் வஞ்சிக் களத்தானே.
விஞ்சை வானவர் தஞ்ச மானவன்
மஞ்சுமா மழைபொழி வஞ்சிக்களம்
கொஞ்சிப் பரவி கூத்தாடு மடியார்
நெஞ்சில் போத வந்தமை ஏத்துமினே.
அங்கண் இரண்டும் அடியார்க்கு அருள்சேர்ப்ப
தெங்கும் பலவும்காண் தென்நாட்டு வஞ்சிக்களம்
பொங்கும் பரிவாலே மன்னியெங்கள் மாதவன்
செங்கோல் ஆட்சி செய்வனாம் அவிவின்றி.
வண்டமர் சோலை வளம்பொழில் நகரான்
தொண்டன் குலசேகரன் தாம்வந்து தோன்றியஊர்
அண்ட வாணன் ஆள்கின்ற வஞ்சிக்களம்
கண்டேத்த வல்லார் தொண்டாள்வர் விண்ணூடே .
--கி.ஶ்ரீர.ஶ்ரீ.

Monday, November 6, 2017

பிராமண பரம்பரை


PRAMANA
Namperumal of Sri Rangam. (206x354).jpg

PARAMBARAI

Vedas
Pancharatra Agama
Ragasya Thiriyam
Varaha Charama Sloka
Rama Abhayapradana Sloka
Bhagavad Gita

Periya Perumal



Periya Piratti

Senai Mudaliyar



Namalwar
à
Thiruviruththam
Thiruvasiriyam
Periya Thiruvandadi
Thiruvoimozhi
Niyaya Tatvam
Purusha Nirnayam
Yoga Sastram
Thaniyan
ß
Nathamuni




Uyyakkondar




Manakkal Nambi




Alwandar
à
Sidhi Thiriyam
Sotra Ratnam
Chathusloki
Geethartha Sangraham


Periya Nambi


Vedanta Deepam
Vedanta Saaram
Vedartha Sangraham
Shri Bhasyam
Gita Bhashyam
Gadyam-3
Nityam
ß
Bhagavat Ramanujar
Thirukkurugai Piran Pillan à
V
Engalazhvan à
V
Nadathoor Ammal à
V
Kidambi Appullar
V
Vedantha Desikar à
V
Kumara Varadachariar
Thiruvoimozhi 6000 Padi

Sri Vishnu Chittiyam

Shurata Prakasika


Paduka Sahasram, Rahasya Grandams, Kavya, Nataka,
Stotram, Sthuthi, Stavam, Gadyams, Padyams. . . . . .


Embar
à
Ramanujar Vdivazhagu


Parasasara Bhattar
à
Tatva Ratnakaram
Sri Rangaraja Stavam
Kuna Ratna Kosam
Bhagavat Guna Darpanam
Ashta Sloki
Dvaya Vivaranam
Sri Ranganatha Stotram
Thirumanjana Kattiyam
Kaisika Purana Commentary
Thiru Nedunthandaga Sastram
Lakshmi Kalyanam
Thaniyan
9000 Padi Commentary for Thiruvoimozhi
Thiruppavai, Kanninun Siruthaambu,
Thiruppallandu, Thiruvandadi, Saranagadi Gadya Commentary
ß
Nanjeeyar


Manikka Malai
Paranda Ragasiyam
Commentary on Stotra Ratnam, Chathusloki, Gadya Thiriyam
4000 Divya Prabanda Commentary
Abhayapradana Saram
Pasurapadi Ramayanam
ß Periya Achan Pillai
V
Nayanar Achan Pillai

Nampillai
Eyunni Madhavachar
V
Eyunni Padbhanabar
V
Naloor Pillai
V
Naloor Achan Pillai }à
36000 Padi Eedu for  Thiruvoimozhi


Vadakku Thiruveedhi Pillai


Ashtadasa Rahasyam
Gadya Thiriya Commentary
ß
Pillai Lokachariyar
Azhagiya Manavala Perumal Nayanar à
Acharya Hirudayam
Arulicheyal Rahasyam
Thiruppaavai 6000 Padi
Kaninun Siruthambu, Amalanadhi Piran Commentary


Thiruvoimozhi Pillai
 Vilansolai Pillai à
Saptakadai


Manavala Mamunigal
à
Rahasya Granda Commentary
Thiruvoimozhi Nootrandadi
Upadesa Ratnamalai
Arthi Prabhandam
Thatparya Deepam
Stotras, Piramana Thirattu



Wednesday, July 19, 2017

விதுர நீதி :


விதுர நீதி :

1/369

எளியார் நலிவான் வெளியது நோக்கி
உளியது ஓங்குவார் ஒத்து!

2/369

இயலா தனமுயற்றல் வானவில்லைக் கோடல்
செயலாப் புனைவார் புரட்டு!

3/370

கதிர்பற்றி வெய்யோன்வான் ஓட்டம் தடுக்கவோ?
ஆதியான சோதியும் அற்று!

4/370

இசைந்து செவிமடுப்பார்க் கல்லால் கசிந்து
உரையா திருப்பார் குரு!

5/371

நெறிமையால் ஈட்டல் முறைமை விடுத்து
பெருமை கொளல்என்னோ சால்பு?

6/372

தற்புகழ்ச்சி தாழ்நெறியோர் பால்ஈட்டல் வெல்பகை
பாற்புகழ்ச்சி இத்தனையும் பாழ்!

7/373

நோற்பவை நோலாமை நோற்கலா வாற்றலிவை
மேலாவார்க் கென்றும் இழுக்கு!

8/373

101. பொய்மை புரட்டு பொறையிலார் வீழ்த்தப்போம்
தூய்மை உளராவார் கூட்டு!

9/374

வேட்கை இலாதார்க்கு ஈந்த பெரும்கல்வி
தாட்சியாய் ஆற்ற விலக்கு !

10/375.

தனக்கலாத எஃதும் தவிர்த்தல் நெறியாம்
தனக்காக்கல் புன்மையுள் ஒன்று!

11/378

தீயது கண்டு பொறுமார் பொறைமைதான்
நோயது கொண்டு  முடித்து!

12/378

குலவதுவை ஏசி பலர்முன்னே தாழ்ப்பவர்போய்
பாஞ்சாலிக் கற்றது பெற்று!

13/379

ஈகை மறப்ப தறமன்று துஷ்யந்தன்
ஆகை போலா மது!

14/379

ஐயமும் பிச்சையும் அந்தணர்க் கீதல்வாய்
செய்க தமைதாழ விட்டு!

15/379

காலத்தே ஈகை கடப்பாடு! ஈவதாய்
கோலிய கோடாமை நன்று!  

16/380

அவரவர் தந்தாம் நெறிதனில் நிற்றல்
தவமென போற்றப் படும்!

17/535
தான்தன் உடலம் புலன்கள் பிராணன் 
மேன்தெய்வம் வாய்ப்பச் செயல்.

--தாசாரதி தாஸன்
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .

Tuesday, May 2, 2017

ராமாநுஜ தசகம் :


ராமாநுஜ தசகம் :

1. பொய்என்றும் சூனியம் மாயையே என்றிவ்வோ 
வாய்மை அலாத சிலர்கூற -- பொய்த்தான்அப் 
பொய்யுரை யாவும் இராமா நுசன்வந்து 
மெய்யுரை செய்வான் மறைக்கு.

2. பாஷ்யகார் எண்மரோடு தானுமாய்,  கோள்கள் 
விஷயமாம் ஆதவன் தன்னொடு -- அஷ்டம 
கோசார வாழ்பலன் போலா, பரமபதம் 
போய்சேர அஷ்டாங்க சித்து.

3. இரவிக் கதிர்இருளைப் நீக்குமிறை யன்பர்
உறவும் அணுக்கமும் சித்தம் -- நெறிபட
நல்குமேல் ராமா நுசனடி சீயாக்கள்
மல்கவொழி யாவோ மருள்?

4. ஜகம்புகழும் ராமா நுசன்மித்யா வாதம் 
ஜகமிதில் நீறுசெய் தோய்த -- ஜகது                                                வாத கொடைவள்ளல் ! முக்திநல் ஞானம்
பொதுவாக்கி வீடுசெய்வான் போந்து !

5. தலைவிதாய் தோழி எனஆழ்வார் செய்த 
அலவல் அதுகண் டிரங்கா -- அலவலன் 
மாலை கடியன் கொடியனென்ன வாளை 
போலை எதிராசர் எற்று?

6. கதிநமக்கு வேறுண்டோ? நன்மதி பெற்ற
யதிபதி ராமா நுசன்செய் -- விதியிங்கு 
அந்தரத்து வைகுந்தம் பைய தரைக்கிழிய 
தந்தாமத் தென்செயமா லுக்கு?

7. உய்ய ஒருவழி நம்முடைய வர்துய்ய 
செய்ய திருவடி! ஐயநீர் -- பொய்யா 
பிடிக்கிலும் மெய்யா உதவிடும்! மாயோன் 
கடைக்கண் செய்யா படிறு.

8. கண்ணன் வழிகீதை! ஆழ்வார் அவர்மொழி
பண்ணார் தமிழ்பாடல் ஆயிரமும் -- அண்ணல்
இராமா நுசமுனி பண்ணியநூல் ஒன்பதோ டாமே
நெறியார் விளக்கம் அவைக்கு.

9. உடையவர் ஆயிரம் நன்றுநமக் கானதும் 
கோடை வெயிலுக்கோர் குன்றருவி -- ஓடை
எனவந்த வள்ளல் இராமா நுசனவன் 
ஞானக்கை ஒல்க உயர்வு !

10. பூமுடியும் பொன்வடமும் பாங்கான தோளிரண்டில் 
 தூமலர் தாழ்சரமும் புத்தாடை -- தாமணிந்த 

போகப் புதுக்கணிப்பும் நம்மிரா மானுசா!
ஏகமெண்ணும் என்றன் மனம்.

முக்தாயம்:


ஏழைஎம் சொல்ஏறும் கொல்?கிளி தாவிய 
வாழைசேர் சோலை அரங்கன் -- புழல்வாவி 
முற்றத்துக் கொவ்வைவாய் கோகிலங்கள் இன்சொல்ஆழ்ந் 
துற்ற எதிதன் செவிக்கு?

இரும்நாள் நமக்கு உலகிதில் இன்பம் 
தரும்திருமால் பக்கல் சலியா -- புலன்வாய் 
வலம்தரும் தன்னடிசேர்த் தொல்லை எதிராசார் 
நலம்தரும் நாமம் புலர்த்து.

-- (அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .

திருவஞ்சிக்களம் :

திருவஞ்சிக்களம் : இருள்தருமா ஞாலத்து இகலொழித்தல் வேண்டுவயேல் மருளொழித்து மடநெஞ்சே வஞ்சிக் களத்துறையும் அருளாழி வண்ணர் கண்ணன் நம்பெருமான...